தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2020, 1:34 PM IST

ETV Bharat / city

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

dam
dam

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்திற்கு 1.8.2020 முதல் 28.11.2020 வரை 120 நாட்களுக்கு 8812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

ABOUT THE AUTHOR

...view details