இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையில் 92 ஆவது படைப்பிரிவுக் காவலராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
சந்திரசேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது இன்னுயிரை தியாகம் செய்த, சந்திரசேகர் குடும்பத்திற்கு