தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடுக்கு தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதலமைச்சர் ஒப்புதல்; தமிழ்நாடு அரசு - மாநிலத்திற்கு பிரஸ் கவுன்சில் உள்ளதா

தமிழ்நாட்டுக்கு தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

MHC
MHC

By

Published : Feb 17, 2022, 2:54 PM IST

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலராக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரியும், சென்னையை சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என்று பொன். மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனைகேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலை மூன்று மாதங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று(பிப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள், சட்டங்கள் உள்ளனவா? என்று தெரிவிக்கும்படி கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில், "உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக சாத்தியக்கூறுகள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:திருமண விழாவின் போது கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details