சென்னை:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’, ’அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் உள்பட பல்வேறு விதமான காலி பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பயிற்சிப் பள்ளியில் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்ற 24 நபர்கள், பட்டாச்சாரியர்கள் 34 பேர், ஓதுவார்கள் 20 பேர், பரிசாரகர்கள் 17 பேர், நந்தவனம் பராமரிப்பாளர்கள் 25 பேர், எழுத்தர் ஏழு பேர், நாதஸ்வரம் வாசிப்போர் 28 பேர் என மொத்தம் 196 நபர்களுக்கும், கருணை அடிப்படை பணி நியமன அடிப்படையில் 12 பேருக்கும் பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை, குடும்பநல நிதி உதவி ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. கடந்த 100 நாள்களில் திருக்கோயிலுக்குச் சொந்தமான 187.91 ஏக்கர் நிலம் உள்பட 625.83 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன.