தமிழ்நாடு

tamil nadu

ஆளுநருடன் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசித்தாரா? முதலமைச்சர்!

By

Published : Sep 8, 2020, 9:50 PM IST

சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.8) நேரில் சந்தித்துப் பேசினார்.

Governor of Tamil Nadu Banwarilal Purohit
Governor of Tamil Nadu Banwarilal Purohit

சென்னை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் இன்று (செப்.8) சென்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தை 45 நிமிடத்திற்கும் மேல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டில் மேற்கொண்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் - ஆளுநர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details