தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் - மாணவர்கள்

சென்னை: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jan 7, 2020, 1:19 PM IST

protest
protest

சென்னை அண்ணா சாலை மின்சார அலுவலகத்தின் பின்புறம் செல்லும் சாலையின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்பொழுது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை, திரும்பப் பெறும்வரை தங்களின் போராட்டம் பல்வேறு வடிவங்களிலும் தொடரும் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

’குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்'

இதையும் படிங்க: ‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம்’ - மாணவர்கள் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details