சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை மாநகர காவல் துறை மற்றும் சர்வதேச நீதி இயக்கம் சார்பில், குழந்தைகள் உரிமை ஊக்குவிப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கு நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்பில் உள்ள குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
18 வயதுக்கு குறைவான சிறார் குற்றச் சம்பவங்களில் சிக்குவது அதிகரித்து வருவதாகவும், அதைத் தடுக்கும் நடவடிக்கையாக புதிதாக 51 கிளப்கள் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.