தமிழ்நாடு

tamil nadu

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

By

Published : Apr 24, 2020, 3:31 PM IST

சென்னை: அண்ணா சாலையில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் சென்றதால் மாநகர் முழுவதும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தக் காவல் துறை முடிவு செய்துள்ளது.

salai
salai

கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து ஊரடங்கை தீவிரப்படுத்தும் விதமாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தை ஒட்டிய சாலைகள், தடுப்புகள் கொண்டு நேற்று அடைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊரடங்கு என்ற ஒன்று அமலில் உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு மக்கள் வாகனங்களில் படையெடுத்தனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான தேனாம்பேட்டை, அண்ணா சாலை போன்றவை அடைக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில்தான் கரோனா பதிப்பு அதிகம் என்பதால் கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படுமெனத் தெரிகிறது.

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் - கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவு!

இதையும் படிங்க: ஊரடங்கை மீறி சுற்றிய நபர்கள் - செய்தித்தாளை படிக்க வைத்து நூதன தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details