சென்னை: சென்னை ஐஐடியின் புதிய தொழில் நுட்பம், நிலநடுக்க அதிர்வலைகளின் துல்லியமான நேரத்தை மதிப்பிடுவது, ஒரு வலுவான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதுடன், சுமார் 30 விநாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை தற்காத்துக் கொள்வதற்குத் தயார் செய்து கொள்ள நேரத்தையும் வழங்குகிறது.
பூமியின் மேற்பரப்பு வரை அலைகள் தாக்குவதற்கு முன் கிடைக்கும் இந்த நேரம் மிகவும் பயனளிக்கக்கூடியது. நிலநடுக்கத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதற்கான நேரம் குறைவானதாகத் தோன்றினாலும், அணு உலைகள், மெட்ரோ போன்ற போக்குவரத்து, உயர் கட்டடங்களில் உள்ள லிப்ட்கள் ஆகியவற்றை நிறுத்தவும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும் இந்த காலம் போதுமானது.
சென்னை ஐஐடியின் கெமிக்கல் பொறியல் துறை பேராசிரியர் அருண் கே தங்கிராலா வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகர்வால் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான PLOS ONEஇல் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகர்வால், "பி-அலை வருகை குறித்த தகவல், நிலநடுக்கத்தின் அளவு, ஆழம் மற்றும் மையப்புள்ளி, இடம் போன்ற பிற மூல அளவு உருக்களைத் தீர்மானிப்பதில் முக்கியமானது.
எனவே, பி-அலை கண்டறிதல் சிக்கலுக்கு உறுதியான, துல்லியமான தீர்வாக அமையும். நிலநடுக்க விவரங்களைச் சரியாக மதிப்பிடுவதற்கும், நிலநடுக்கம் அல்லது பிற தூண்டப்பட்ட நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு