சென்னை: இந்தியாவின் ஊரகப் பகுதியில் குறைந்த செலவில் 5ஜி நெட்ஒர்க் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் இவை ஈடுபட உள்ளன. ஊரகப் பகுதி தகவல் தொழில்நுட்ப தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து எல்டிஐ தலைமை செயல் அலுவலரையும், நிர்வாக வாரிய உறுப்பினருமான நசிகேத் தேஷ்பாண்டே, “நவீன சமூகத்தை உருவாக்குவதற்கான அடுத்த நிலை கண்டுபிடிப்புக்கு 5ஜி உறுதி அளிக்கிறது. இந்த பயன்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியமானது.
சென்னை ஐஐடி-யுடன் எல்டிஐ பங்குதாரராக இருப்பது இந்தியாவின் தொலை தூரப் பகுதிகளில் உள்ள மக்களையும் சிறந்த முறையில் இணைப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாகும்.