தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பசுக்களின் விவரங்களை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் தெரிவிக்கவேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்! - தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்
தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

By

Published : Mar 1, 2022, 6:28 AM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அவை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், பூசாரிகளுக்கும் அறநிலைய வழங்குவதாகவும், அந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதை மறுத்து அறநிலையத் துறை தரப்பு, மறுதானம் செய்யப்படும் பசுக்களை முறையாக பாதுகாப்பது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பசுக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் தரப்பில், தானமாக பெறப்பட்ட பசுக்கள் மற்றும் தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களின் விவரங்கள் பதிவு செய்து பராமரிக்கப்படுவதாகவும், தற்போது கோயிலுக்குள் 77 பால் கொடுக்கும் பசுக்களும், கோயிலிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலம் ஒதுக்கி, 74 பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறுவது தவறு எனவும், கால்நடை மருத்துவர்கள் இந்த பசுக்களை அடிக்கடி ஆய்வு செய்து வருவதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர், கோயில் பூசாரிகளுக்கு, பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றார்.

இதையடுத்து, பூசாரிகளுக்குப் பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்தி விட்டு, அவற்றை கோசாலைகளுக்கு அனுப்பலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களையும், மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களையும் தெரிவிக்கும்படி, கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:அம்பேத்கரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details