சென்னை:விசிக தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “2003ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் ஆகியோர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் எனக் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், தன்னைப் பற்றியும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி. ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.
என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை முழுமையாக விசாரிக்காமல், கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.