தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதி தீவிரக் கரோனா தாக்கத்தில் சென்னை - திரு.வி.க. நகரில் மட்டும் 324 பேர் பாதிப்பு! - chennai corporation releases the list of corona affected people in zones

சென்னை: கரோனா தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் 200ஐ கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

corona
corona

By

Published : May 4, 2020, 2:36 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் அதி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரேநாளில் மட்டும், 203 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, மண்டலவாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்தப் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • திரு.வி.க. நகர் - 324 பேர்
  • இராயபுரம் - 275 பேர்
  • கோடம்பாக்கம் - 199 பேர்
  • தேனாம்பேட்டை - 166 பேர்
  • அண்ணா நகர் - 130 பேர்
  • தண்டையார்பேட்டை - 118 பேர்
  • வளசரவாக்கம் - 92 பேர்
  • அம்பத்தூர் - 58 பேர்
  • அடையாறு - 29 பேர்
  • திருவொற்றியூர் - 22 பேர்
  • பெருங்குடி - 10 பேர்
  • ஆலந்தூர் - 10 பேர்
  • மாதவரம் - 9 பேர்
  • சோழிங்கநல்லூர் - 6 பேர்
  • மணலி - 5 பேர்

226 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

இதையும் படிங்க: 'பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறுக - ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details