தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பு பணிகள்: சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு

By

Published : Apr 11, 2022, 6:56 AM IST

கடந்த ஆண்டு கரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும் சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு
சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு

சென்னை: உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் போதிய மருத்துவ வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.

கரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு செய்துள்ளது. இதில் கரோனா கேர் சென்டரில் உணவு வழங்க மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.41.53 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருந்து மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் வாங்க ரூ.72.57 கோடியும், கருவிகள் வாங்க ரூ.1.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் சோதனை செய்த தன்னார்வலர்களுக்கு மற்றும் மருந்துவ உபகரணங்களுக்கு ரூ.116.72 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து வாடகை கணக்கில் ரூ.45.59 கோடி, மின் அமைப்புகள் அமைக்க ரூ.5.51 கோடி, பிற செலவுகளுக்கு ரூ.26.79 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:எய்ம்ஸ் ஒப்பந்த நடைமுறைகள் தொடக்கம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details