தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2021, 6:44 PM IST

ETV Bharat / city

சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் சாதனை

விமான நிலைய சரக்ககமானது, கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை: கரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருள்களுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், வென்டிலேட்டா்கள் உள்ளிட்ட மருந்துவ உபகரணங்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் சென்னையிலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட தோல் பொருள்கள், மீன், நண்டு, காய்கறிகள், பழங்கள் எனப்பெருமளவு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

அதேபோல மேற்கு வங்கம், அந்தமான் உள்ளிட்ட இடங்களிலிருந்து பொருள்களை உள்நாட்டு விமானங்கள் மூலம் சென்னை கொண்டு வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்படி கரோனா 2ஆவது அலையிலும் கடந்த ஆறு 6 மாதங்களில் மட்டும் சென்னை விமான நிலைய சரக்ககம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இந்த அளவு என்பது கடந்தாண்டை 20 விழுக்காடு அதிகம்.

இதையும் படிங்க:பாரீஸ் முதல் சென்னை: புதிய விமான சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details