சென்னை: திருமங்கலம் ரவுண்டு பில்டிங் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஒரு ஆண்டாக அம்பத்தூர் அத்திப்பட்டில் செயல்பட்டுவரும் தனியார் (swiggy instamart) நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஹரிஷ் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த ஏஜஸ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் சேமிப்பு கிடங்கில் இருந்து சில பொருள்களை திருடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை நிர்வாகம் ஆய்வு செய்து, இருவரையும் பணிநீக்கம் மற்றும் ஊதியம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலாளரான புகழேந்தியை இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிடித்தம் செய்த ஊதியத்தை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு புகழேந்தி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தாங்கள் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.