தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Video In: சென்னையில் பால் பாக்கெட்டுகள் திருட்டு - பால் பாக்கெட்டுகள் டப்பாவுடன் திருட்டு

சென்னை திருவல்லிக்கேணியில் பாலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பால் பாக்கெட்டுகள் திருட்டு
பால் பாக்கெட்டுகள் திருட்டு

By

Published : Apr 11, 2022, 7:37 AM IST

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பாலகத்தின் முன்பு நேற்று (ஏப்ரல் 10) அதிகாலை பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடையின் உரிமையாளர் செந்தில் பாலகத்தை திறக்க வந்துள்ளார். அப்போது பால் பாக்கெட்டுகள் குறைந்து உள்ளதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த செந்தில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் பால் பாக்கெட்களை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

பால் பாக்கெட்டுகள் திருட்டு

இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பல்லாவரம் அருகே தொடர் கொள்ளை; 86 சவரன் தங்க நகைகள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details