சென்னை:தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை காண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்பில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல இந்தாண்டு பொங்கல் தொகுப்பிலும் ரொக்கம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, குடும்ப அட்டைக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டது.