தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சு. வெங்கடேசனுக்கு கனடாவின் இயல் விருது அறிவிப்பு! - iyal award announced for madurai MP venkatesan

சென்னை: எழுத்தாளரும் எம்பியுமான சு. வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ஆம் ஆண்டிற்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சு. வெங்கடேசனுக்கு கனடாவின் இயல்விருது அறிவிப்பு!
சு. வெங்கடேசனுக்கு கனடாவின் இயல்விருது அறிவிப்பு!

By

Published : Jan 6, 2020, 2:08 PM IST

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம், நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் வெங்கடேசன். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்த இவர், இதுவரை நான்கு கவிதை தொகுப்புகள், ஐந்து கட்டுரை தொகுப்புகள், இரண்டு புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற இளம் எழுத்தாளர் என்ற பெருமையை தன்னகத்தே வைத்திருக்கிறார். இந்த நாவல் வசந்தபாலன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு அரவான் படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரியின் தொடரை வாசகர்கள் தமிழ்நாடு இலக்கிய சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். இவரை மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியர். அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர்.

சு. வெங்கடசேன் தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வு தரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியசத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ஆம் ஆண்டிற்கான இயல் விருது சு. வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2020 ஜூன் மாதம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...ஜே.என்.யூ. வன்முறை: 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details