சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே காரில் வந்த மணிகண்டனை நிறுத்தி போலிசார் அவரை தாக்கியதோடு, அவதூறாகவும் பேசியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் அதே இடத்தில் பெட்ரோல் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். சீட் பெல்ட் அணியாமலும், ஓட்டுநருக்கான சீருடை இல்லாமலும் வாகனம் ஓட்டியதால் அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். எனவே அவரது மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தனர்.