அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் தேமுதிக அறிவித்துள்ளது. விஜயகாந்த் கையொப்பமிட்ட இந்த அறிவிப்பு வெளியானதும், அங்கு கூடியிருந்த தேமுதிக தொண்டர்கள் அனைவரும் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை விஜயகாந்த் எப்போது அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், இவ்வளவு நாள் தங்களை கிள்ளுக்கீரையாக பார்த்த அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தக்கப்பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் பேசினர்.