சென்னை:சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பிரதமர், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோரின் படங்களை மார்ஃபிங் செய்து யூ டியூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் பால் கனகராஜ், ”யாருடைய துண்டுதலின்பேரில் அந்த யூடியூப் சேனல் செயல்படுகிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 'பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்' திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.