சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், வரும் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு நேற்று ஆணை வெளியிட்டது.