தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2022, 10:38 PM IST

Updated : Sep 3, 2022, 11:07 PM IST

ETV Bharat / city

சென்னை மாநகர தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் விழா!

சென்னையில் மாநகர தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி மேயர் பிரியா பாராட்டுச் சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். நிகழ்வில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், ஆளுங்கட்சித் தலைவர், சுகாதாரத்துறை குழுத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது மாநகராட்சிக்குப் புதிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. முதலில் மேடையில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 'பொதுமக்கள் குப்பை போடும்போது மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனப் பிரித்து கொடுக்க வேண்டும். 78 விழுக்காடு பொது மக்கள் மட்டுமே பிரித்து கொடுக்கிறார்கள். பச்சை கலரில் மட்கும் குப்பைகளையும், ஊதா கலரில் மட்காத குப்பைகளை கொடுக்க வேண்டும்' என ஆணையர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மேயர் பிரியா ராஜன், ’சென்னை மாநகராட்சியில் மாஸ் கிளினிங் மாதத்தில் 2ஆவது சனிக்கிழமை மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. தற்போது பொது மக்கள் 78 விழுக்காடு பேர் மட்டுமே குப்பைகளை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்துக்கொடுக்கிறார்கள்.

இதனை 100 விழுக்காடாக விரைவில் மாற்ற வேண்டும். இந்த திட்டம் வெற்றியடைய முக்கியக்காரணம் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே, ஆதலால் 130 தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளியினை சூறையாடிய வழக்கு... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

Last Updated : Sep 3, 2022, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details