சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரான பொன்ராஜ் ஏப். 3ஆம் தேதி இரவு மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி முயன்றபோது, ஆட்டோ இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பொன்ராஜூக்கு கை, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
தானாக சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்:இதனிடையே பொன்ராஜ் மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது ஒருவர் சிகிச்சைக்காக நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொன்ராஜ், நந்தம்பாக்கம் போலீசாருக்கும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.