தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2019, 11:05 PM IST

ETV Bharat / city

ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது!

சென்னை: நாடு முழுவதும் ஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Atm skimmer theft main acquit arrested
Atm skimmer theft main acquit arrested

சென்னை சேப்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில், பிப்ரவரி 10ஆம் தேதி கொல்கத்தா சைபர் கிரைம் காவல் துரையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். கொல்கத்தா காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பண மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் ஸ்கிம்மர், ரகசிய படக்கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பதும் அம்பலமானது. இந்த வழக்கில் பிடிபட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி, விசாரணையின்போது திருவல்லிக்கேணியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

ரசாயனம் தடவிய பழங்கள்; ஒரு டன் சிக்கியது!

தனிப்படையினரும் மேற்கு வங்கம் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். கைபேசியின் சமிக்ஞைகள், கைது செய்யப்பட்ட கூட்டாளிகள் கொடுத்த தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட காலமாக பாஸ்கரை கண்காணித்து வந்துள்ளனர். இவ்வேளையில், நேற்று தப்பிச் சென்ற பாஸ்கரை மேற்கு வங்கத்தில் வைத்து, சென்னை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எத்தனை ஏடிஎம்களில் ஸ்கிம்மர் இயந்திரங்கள் பொருத்திக் கொள்ளையடித்துள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!

ABOUT THE AUTHOR

...view details