தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபல உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக கடை ஊழியர் மீது தாக்குதல் ...போலீஸ் விசாரணை - உணவக நிர்வாகம் சார்பில் அறிக்கை

சென்னையில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கப்பட்டதாக கூறி வாடிக்கையாளர் ஊழியரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 24, 2022, 7:28 AM IST

சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே அமைந்துள்ள ( ஜூனியர் குப்பண்ணா) பிரபல தனியார் உணவகத்திற்கு நேற்று விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் உணவருந்த சென்றுள்ளார். பின்னர் கார்த்தி சிக்கன் பிரியாணி, ஆட்டுக்கால் சூப், இட்லி, கலக்கி உள்ளிட்ட உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து உணவகம் வழங்கிய சிக்கன் பிரியாணியில் இருந்து தூர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த கார்த்தி இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, பிரியாணி கெட்டு போனதை அவர்களும் ஒப்பு கொண்டதாக கார்த்தி தெரிவித்தார்.

மேலும் இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டு விடும்படியும், அதற்கு பதிலாக வேறு பிரியாணி தருவதாக சொல்லியதாக கார்த்தி தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என உறுதி செய்யாமல் அது குறித்து விசாரிக்கும் போது பொறுப்பற்ற முறையில் பதில் கூறுவதாகவும் கார்த்தி ஸ்ருதி தம்பதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்த உணவை தங்கள் 2 வயது குழந்தை உட்கொண்டிருந்தால் நிலைமை என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பிரபல உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக கடை ஊழியர் மீது தாக்குதல்

இந்த விவகாரம் குறித்து கார்த்தி காவல் துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, தாங்கள் வழங்கிய பிரியாணி கெட்டுப் போகவில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறையை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை என வாடிக்கையாளர் கார்த்தி தெரிவித்தார்.

இந்நிலையில் உணவக நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி மற்றும் ஷ்ருதி ஆகியோர் குடும்பத்துடன் உணவகத்திற்கு வந்து 2000 ரூபாய் வரை சாப்பிட்டு விட்டு, பின்னர் கெட்டுப்போனதாக பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்க சென்ற இரு ஊழியர்களை கார்த்தி மற்றும் அவரது ஆட்கள் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்த பிரியாணி 294 பிளேட்டுகள் வழங்கி இருப்பதாகவும், ஒரு புகாரும் இதுவரை வரவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் கார்த்தி 1.5 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி மிரட்டுவதாகவும், தங்களது நிறுவன பெயரை கெடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக உணவக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் வாடிக்கையாளர் கார்த்தி ஊழியர்களை தாக்கியது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் உணவக நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இதையும் படிங்க: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாடவேண்டும் என நினைத்தால் இலவசப்பயிற்சி.. விஜய் அமிர்தராஜ்

ABOUT THE AUTHOR

...view details