சென்னை: இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், " கரோனா பரவல் குறைந்ததில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் தான் காரணம். அதற்கு அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தொற்று குறைந்து வரும் நேரத்தில் பொது மக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத நிலை தற்போது உள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உயிரிழப்பு குறைவு
மேலும், ஜனவரிக்குப் பின், முன்பு இருந்த கரோனா உயிரிழப்பை விட தற்போது 10 மடங்கு இறப்பு குறைந்துள்ளது. குறிப்பாக அந்த இறப்பில் 90% பேர் இணை நோய் உள்ளவர்கள், அதிலும், 93% பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர்.