தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக அரவிந்தன் ஐபிஎஸ் நியமனம்! - தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக அரவிந்தன்

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன், தென்மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக அரவிந்தன் ஐபிஎஸ் நியமனம்!
தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக அரவிந்தன் ஐபிஎஸ் நியமனம்!

By

Published : Apr 19, 2022, 12:00 PM IST

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அரவிந்தன். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய எஸ்பி யாக, மயிலாடுதுறை எஸ் பியாக இருந்த சுகுணா சிங் மாற்றம் செய்யப்பட்டார். அரவிந்தனுக்கு எந்தப் பணியிடமும் வழங்கப்படவில்லை, அவர் மத்திய அரசு பணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அரவிந்தன் தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவுக்கு இவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக செயல்படுவார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், அதனை அடியோடு ஒழிக்கவும் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பணியின்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details