தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பாரத் பந்த் தமிழ்நாட்டில் படுதோல்வி' - மு க ஸ்டாலின்

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முழு அடைப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை ஆவேசம்
அண்ணாமலை ஆவேசம்

By

Published : Sep 28, 2021, 8:50 AM IST

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நேற்று (செப். 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் உழவருக்கு நன்மைபயக்கும், உழவரை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தன. ஆனால் அப்போராட்டம் படுதோல்வியடைந்ததோடு, சில அரசியல் கட்சிகளைத் தவிர எந்தவொரு உழவனும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இல்லை.

துரோகம் இழைக்கும் திமுக

ஏனெனில், பிரதமரின் உழவருக்கான பயிர்க் காப்பீடு, கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் உழவரின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டி உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதன் மூலம் உழவர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார்.

25 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சிசெய்த திமுக, உழவரின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால், ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக வெற்று ஆர்ப்பாட்ட அரசியலை செய்து உழவருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துக்கொண்டிருக்கிறது.

தீர்வுதான் என்ன முதலமைச்சரே?

தற்போதைய நிலையில் வெங்காய உற்பத்தி, காய்கறிகள் உற்பத்தி அதிகமாவதால் விளைபொருள்களை, உழவர் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இன்று, கோயம்புத்தூர் மாநகரில் வெங்காய விலை 40 ரூபாய். ஆனால், இடைத்தரகர்களிடம் உழவர் எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் உழவரை வியாபாரிகளாக மாற்றி, தொழில்முனைவோர்களாக மாற்றியமைக்கும்.

வேளாண் சட்டங்களைப் புறக்கணிக்கும் ஸ்டாலின், உழவரின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாகத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மரக்காணம் கலவரம்: பாமக தரப்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details