தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2022, 3:03 PM IST

ETV Bharat / city

வன்னியர் இட ஒதுக்கீடு: புள்ளி விவரங்களை சேகரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஏப்ரல் 8) பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அதன்படி 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பேட்டி

இந்த குழுவுடன் முதலைச்சர் ஸ்டாலினை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தை கொடுத்துள்ளோம். அதில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டுகோள்விடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு வார காலத்தில், இந்த புள்ளி விவரங்களை சேகரிக்க முடியும்.

அதோடு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வலியுறுத்தியுள்ளோம். இந்தாண்டு சட்டம் இயற்றப்பட்டால் மிக்க மகிழ்ச்சி. திமுக-அதிமுக மேல் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை.

இது சமூக நீதி பிரச்சனை. இதில் அரசியல் வேண்டாம். எங்கள் கோரிக்கை ஏற்று அதிமுக 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. அதை திமுக உறுதி செய்தது. இதில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சசிகலா வழக்கின் தீர்ப்பு நீதிபதி விடுமுறையால் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details