தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - வடகிழக்கு பருவமழை

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுகளிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

an-additional-200-special-medical-camps-started-by-chief-minister-stalin
கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By

Published : Nov 12, 2021, 9:22 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இதன் தொடக்க நிகழ்வாக சென்னை, தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் முதற்கட்டமாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

இதையும் படிங்க:வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details