தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2021, 2:21 PM IST

ETV Bharat / city

அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்

அதிமுக தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 50 ஆண்டு தொடக்க நாளான இன்று கட்சி கொடியேற்றி அதிமுக தொண்டர்கள் கொண்டாடினர்.

கொடியேற்றி கொண்டாட்டம்
கொடியேற்றி கொண்டாட்டம்

சென்னை: மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று(அக்.17) 50ஆவது ஆண்டு தொடங்குகிறது.

இதையொட்டி, அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டாக இந்தாண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், கட்சி தொடங்கிய நாளான இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொடியேற்றி கொண்டாட்டம்

அதைத் தொடர்ந்து, அதிமுககட்சிக் கொடியை ஏற்றிவைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக பொன்விழா சிறப்பு மலரை ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர் பொன்னையன் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, கட்சிக்காக உழைத்து உயிரிழந்த 5 குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவியினை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழங்கினர்.

கொடியேற்றி கொண்டாட்டம்

பின்னர் அதிமுக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

ABOUT THE AUTHOR

...view details