தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுதானிய உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் - வேளாண்துறை செயலர்

தமிழ்நாட்டில் ஊட்டசத்து குறைபாடு அதிகரித்து காணப்படுவதால், சிறுதானிய உற்பத்திக்கு பட்ஜெட்டில் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளதாக வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 19, 2022, 10:26 PM IST

சிறுதானியா உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
சிறுதானியா உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச்.19) தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண்துறை செயலர் சமய மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஊட்டச் சத்துகுறைபாடு அதிகளவில் காணப்படுவதால், பயறு மற்றும் சிறுதானிய உற்பத்தி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுபயிர் உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்படுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான மரக்கன்றுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவசாய பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் தங்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப என்ன மாதிரியான பொருள்களை விற்பனை செய்யலாம் என கண்டறிய 'தமிழ் மண் வளம்' எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய உற்பத்தி மண்டலங்கள் திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பனை பொருள்களை கூடுதல் மதிப்பீட்டு பொருள்களாக மாற்றி விற்பனை செய்யும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இயற்கை வேளாண் விவசாயிகளை ஊக்குவிக்க இயற்கை வேளாண் மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தக்காளி உற்பத்தி குறைவாக உள்ள செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூடுதல் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். தென்னை, மா உள்ளிட்ட மரங்களுக்கு இடையே ஊடு பயிராக என்னென்ன, பயிர் செய்யலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.

இதையும் படிங்க:நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details