- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989,
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016,
விதி 16 மற்றும் திருத்த விதிகள் 2018இன்படி முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டு 2021 ஜூலை 20 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- (அரசாணை (நிலை) எண்.56, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள் 2021 ஜூலை 20)
இக்குழுவில், நிதித் துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் - தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.