தமிழில் ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜெயலட்சுமி. இவர், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்திருந்தாலும், டிவி சீரியல் நடிகையாகவே மக்களுக்கு பரிட்சயமானவராக உள்ளார். சமூக ஆர்வலரான ஜெயலட்சுமி, சிநேகம் என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், நடிகை ஜெயலட்சுமி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் சாலையில் உள்ள மரங்கள் நமக்கான வாழ்வியல் பொக்கிஷம். ஆனால், பல நிறுவனங்கள் மரத்தின் மீது ஆணி அடித்து, சேதப்படுத்தி விளம்பரங்களை வைத்துள்ளனர். இதனைத் தடுக்கும்பொருட்டு உயர் நீதிமன்றத்தில் சிநேகம் அறக்கட்டளை சார்பில் பொதுநல வழக்கு போடப்பட்டது.