தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்னும் கரைதிரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து 32, கன்னியாகுமரியிலிருந்து 172 என ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு கடலுக்குள் சென்றுள்ள, 210 படகுகளை பத்திரமாக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 30, 2020, 4:25 AM IST

Minister Jayakumar
Minister Jayakumar

சென்னை:புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில், கடலில் மீன்பிடிக்கச்சென்று கரைதிரும்பாத 210 படகுகளை மீட்க, கடலோர காவல்படையின் உதவியுடன், தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு, நவம்பர் 28ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி வரும் டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் வடஇலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியினை கடந்து குமரி கடல் வழியே அரபி கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தென்தமிழகத்தின் இராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட மீன்துறை இணை,துணை, உதவி இயக்குநர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும், தேவாலயங்கள் மூலம் புயல் எச்சரிக்கை தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நவ., 29ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றுள்ள விசைப்படகுகளை மீன்பிடித்துறைமுகங்கள்,மீன்பிடித்தளங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செயற்கைக்கோள் தொலைப்பேசி, விஎச்எப் சாதனம் மூலம் தொடர்பு கொண்டு அங்கு திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி படகுகளை தொடர்பு கொண்டு அவற்றை பாதுகாப்பாக கரைதிரும்ப ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் (தொடர்பு எண்: 04651- 226235) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் (தொடர்பு எண்: 0461 – 2320458) 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்துறை இயக்குநரக கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் (தொடர்பு எண்: 044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தூத்துக்குடியிலிருந்து 38, கன்னியாகுமரியாகுமரியிலிருந்து 172 ஆழ்கடல் மீன்பிடிப்பில் தற்போது ஈடுப்பட்டுள்ள 210 படகுகளை கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் பத்திரமாக கரைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 8 படகுகள் இதுவரை கரைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை இயக்குநர் மூலம், அண்டைய மாநிலமான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் இலட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்களுக்கு, அங்குள்ள மீன்பிடி துறைமுகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கவும் உரிய உதவிகள் வழங்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொச்சின், கோவா, மும்பை மற்றும் இலட்சதீவில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படை மூலம் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 218 படகுகளின் இருப்பிடம் குறித்த தகவல்கள் வாங்கப்பட்டு, அவர்களை கரைக்கு மீட்டுக் கொண்டு வரவும் கடலோர பாதுகாப்புப்படை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 8 படகுகள் திரும்ப வரப்பட்டுள்ளது. கரை திரும்பாத மீனவர்கள் மற்றும் 210 படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை' - அமைச்சர் தங்கமணி

ABOUT THE AUTHOR

...view details