சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 11 நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அறக்கட்டளை வசம் அளித்து சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளர்களை பட்டிபுலம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு புறத்தின் பண்ணை வீடுகள், பொழுதுபோக்கு விடுதிகள், தோட்டங்கள் ஆகியவைகளில் மதிற் சுவர் ஏற்படுத்தியும் அவற்றிற்கு அணுகு பாதை அமைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களில் ஒன்றான சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம், உணவகம், பேக்கிரி, மதிற் சுவர்கள் மற்றும் அணுகு பாதை சாலை அமைத்தும் (17.90 ஏக்கர்) நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது.