திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது. அதில் சேலம்-ஈரோடு ஒன்றியங்களின் சார்பாக தமிழக ஆவின் நிறுவனமும் கலந்து கொண்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் நெய்யின் தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக ரூ.23 கோடி மதிப்பில் 7,24,000 கிலோ நெய் கொள்முதல் செய்ய தேர்வாகியுள்ளது.