தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொலைக்கு பழிப்பழி தீர்க்க நண்பர்கள் வெறியாட்டம் - இருவர் படுகாயம்! - காங்கிரஸ் பிரமுகர் கொலை

சென்னை ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நாகூர் மீரான் கொலையில் தொடர்புடையதாக கருதப்படுபவர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி, இருவரை வெட்டி கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aadambakkam murder
aadambakkam murder

By

Published : Oct 15, 2021, 7:42 PM IST

சென்னை: ஆதம்பாக்கத்தில் நேற்று (அக்டோபர் 14) பிரபல ரவுடியும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நாகூர் மீரான் என்பவரை அவரது தோழி இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கொலையாளிகள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

பழிக்குப்பழி

இந்நிலையில் கொலையுண்ட நாகூர் மீரானின் கூட்டாளிகள் சிலர் கொலைக்கு பழி வாங்கும் விதமாக பல்லாவரத்தில் உள்ள கொலையாளி ராபினின் உறவினர்களான அந்தோனி, சகாயம் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதி

இதில் பலத்த காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர்.

குண்டுவீசித் தாக்குதல் நடத்திய வீடு

இது குறித்து பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரபல ரவுடி நாகூர்மீரான் வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details