சென்னை: சென்னை கேகே நகர் குடியிருப்பில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று(செப்.13) இரவு தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர் சிவகுமாரை தாக்கி செல்போனை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, சிவக்குமார் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.