சென்னை:கரோனா தொற்று பாதிப்பு மாநிலம் முழுவதும் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் காவல் துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள், தனிநபர்களிடமிருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டுவருகிறது.