செம்மொழியான தமிழ்மொழியே..
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்திய அரசால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கான இலக்கணத்தை வளர்த்தார்.
தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர்
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் இன்று இறுதி செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்து துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கொங்கு மண்டலம்: