தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2021, 5:42 PM IST

ETV Bharat / city

கரோனா: தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் பதில்...

தமிழ்நாட்டில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துவருவதைத் தொடர்ந்து செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் திறக்கப்பட்ட 20 நாட்களில் 160க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்று அதிகம் பரவிவருகிறது. இந்த நிலையில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல்வெளியாகின.

இதுகுறித்து இன்று(செப்.25) செய்தியாளர்கள் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "6, 8ஆம் வகுப்புகள் திறக்க இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. இது குறித்து மேலும் ஆலோசனை செய்யப்பட்டப்பின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: அமைச்சரின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details