துபாயிலிருந்து சென்னைக்கு வந்த ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதணையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த முகமது ரபீக்(23)என்ற பயணியின் சூட்கேசை சோதணையிட்ட போது அவர் அதன் கைப்பிடிக்குள் ரூ.9.8 லட்சம் மதிப்புடைய 194 கிராம் தங்க செயினை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னையை சோ்ந்த மற்றொரு பயணி அப்துல் கரீம்(35) என்பவரை சோதணையிட்டபோது உள்ளாடைக்குள் ரூ.8.6 லட்சம் மதிப்பிலான 172 கிராம் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
சூட்கேஸ் கைப்பிடிக்குள் தங்கம்... சூட்சுமமாக கடத்திய நபர் கைது - Gold smuggling from dubai
சென்னை: சூட்கேஸின் கைப்பிடிக்குள்ளும் உள்ளாடைக்குள்ளும் மறைத்து வைத்திருந்த 18.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
![சூட்கேஸ் கைப்பிடிக்குள் தங்கம்... சூட்சுமமாக கடத்திய நபர் கைது 366 g gold seized at Chennai airport smuggling from dubai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:15:17:1607600717-tn-che-04-gold-smuggling-visual-script-7208368-10122020170929-1012f-1607600369-900.jpg)
366 g gold seized at Chennai airport smuggling from dubai
இருவரிடமிருந்தும் மொத்தம் 18.4 லட்சம் மதிப்புடைய 366 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.