தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2021, 3:05 PM IST

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM
3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

1.எம்.பி.யாகிறார் அமைச்சர் எல். முருகன்

ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

2.தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி இன்று பதவி ஏற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி அவருக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார்.

3.பெற்றோருக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்காதீர்கள் - சூர்யா உருக்கம்

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், நடிகர் சூர்யா விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

4.மோடிக்கு தினமும் பிறந்தநாள் வந்தால் மகிழ்ச்சி - ப. சிதம்பரத்தின் வஞ்சப்புகழ்ச்சி

நாள்தோறும் முறையாக நடைபெற வேண்டிய தடுப்பூசித் திட்டம் ஒரு குறிப்பிட்ட பிறந்தநாள் தேதியில் உச்சமடைவது சரியான அணுகுமுறை அல்ல என ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

5.தொடர் சரிவில் தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து சவரனுக்கு ரூ. 34,952 என விற்பனையாகிறது.

6.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் காத்திருக்கிறதா லித்தியம்..!

இந்தியாவில் பெருகி வரும் மின்சார வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா இல்லை பயனளிக்கிறதா என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

7.முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு செப். 20 முதல் விண்ணப்பம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

8.பான்-ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

9.புதிய சாதனையுடன் தடுப்பூசி இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டிவருகிறது.

10.காபூல் தாக்குதல் பெரும் தவறு - பகிரங்க மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா

ஆகஸ்ட் மாதம் காபூலில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதல் அமெரிக்காவின் தவறான முடிவால் நடைபெற்றது எனப் பென்டகன் மன்னிப்புக் கேட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details