சென்னை: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 22 கிலோ சினைப்பை கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திருப்பத்தூரைச் சேர்ந்த 45 வயதான தனவதி பாய் என்ற பெண் கடந்த ஓராண்டாக வயிறு வலியால் மிகவும் சிரப்பப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வயிறு வலி தாங்காமல், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதிக்கையில், அவரின் வயிற்றில் சினைப்பைக் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றிலிருந்த சினைப்பைக் கட்டியை அகற்றுவதற்கான பரிசோதனைகளை செய்துள்ளனர்.
பின்னர், ஜூலை 29ஆம் தேதி காலை எழும்பூர் அரசு மருத்துவமனையின் மகளிரியல் பிரிவு குழுவால், 45 வயது பெண்ணின் சினைப்பையில் ஏற்பட்ட மிகப்பெரிய கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.