தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் திருவிழா2021: 2ஆவது நாளாக சுனில் அரோரா ஆலோசனை!

By

Published : Feb 11, 2021, 1:27 PM IST

சென்னை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப். 11) இரண்டாம் நாளாக தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், உள் துறைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

2021 assembly Election
2021 assembly Election

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் 8 பேர் கொண்ட தேர்தல் அலுவலர்கள் குழு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தது. இதில் நேற்று (பிப். 10) அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (பிப். 11)ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஒழுங்குபடுத்தும் முகாம்களுடன் தேர்தல் ஆணையக் குழுவினர ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், உள் துறைச் செயலாளருடன் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித் துறை அலுவலர்கள், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர்கள் கடலோர காவல்படை ஆகிய அரசு நிறுவனங்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க...கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details