தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோத்தகிரியில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! - கோத்தகிரியில் இரண்டு மாணவர்கள் பலி

கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளபோது சாலையில் நிலைதடுமாறி கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.

கோத்தகிரியில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
கோத்தகிரியில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

By

Published : Apr 17, 2022, 1:57 PM IST

கோவை: மேட்டுப்பாளையம் பாரதி நகர், காட்டூர், மகாதேவபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் முகமது தெளபீக்(16), முகமது ஆரிப்(16), முகமது இர்பான்(18), காலித்(16), அர்சத்(16).

இவர்களில் முகமது தெளபீக், முகமது ஆரிப், அர்சத் உள்ளிட்ட மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

முகமது இர்பான் கோவை தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் பயின்று வருகிறார். காலித் மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் 5 பேரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது முகமது இர்பான் ஓட்டியுள்ளார் கார், மேட்டுப்பாளையம் வரும் வழியில் கோத்தகிரி சாலையில் திடீரென நிலைதடுமாறி அருகே இருந்த மரத்ததின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் முகமது தெளபீக், முகமது ஆரிப் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இரு மாணவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு - சிசிடிவியில் சிக்கிய இருவர் யார்? போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details