தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2022, 4:52 PM IST

ETV Bharat / city

சென்னையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

சென்னையில் ஒரே நாளில் மின்சாரம் தாக்கி இளைஞர் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி  ஒரே நாளில் 2 பேர் பலி
மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி

சென்னை : கண்ணகி நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி என்ற பாட்ஷா(18). இவரது நண்பர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த முத்து. இருவரும் நேற்று(ஜூலை.04) முன் தினம் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டி சம்பை சுத்தம் செய்தனர்.

சம்ப் உள்ளே மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பார்த்தசாரதிக்கு திடீரென மின்சாரம் தாக்கி விழுந்தார். உடனே முத்து, மற்றும் உடன் வேலை செய்த நபர்கள் வெளியே தூக்கி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பரிசோதனை செய்ததில் பார்த்தசாரதி இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து மயிலாப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தசாரதி உடலை உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மகன் பாரத்(13) ஜாபர்கான்பேட்டையில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் (ஜூலை.04) வழக்கம் போல, பள்ளி முடிந்து விட்டு பாரத் வீட்டிற்கு வந்தார். அவரது சகோதரி பாவனா டியூசன் சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று, பாரத் வீட்டில் தனியாக இருந்ததால், வீட்டின் கதவை உள்தாப்பால் போட்டு விட்டு, வீட்டில் குளித்துள்ளார்‌. தொடர்ந்து, குளித்து முடித்து விட்டு ஈர கையுடன் ஹேர் டிரையர் எடுத்துள்ளார். அதில் மூடி இல்லாததால் சிறுவன் பாரத் மீது மின்சாரம் பாய்ந்தது. வீட்டின் கதவு உள் தாழ்பால் போட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை.

ஒருமணி நேரத்திற்கு மேலாக வீட்டின் உள்ளேயே பாரத் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. பின்னர், சிறுவன் பாரத்தின் முனகல் சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து சிறுவன் பாரத்தை மீட்டு சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, குமரன் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் தள்ளுவண்டி கடையில் 5,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி...

ABOUT THE AUTHOR

...view details